திருவள்ளூர்

எல்லையம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

DIN

ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள சூளைமேனி கிராமத்தில் உள்ள ஸ்ரீ எல்லையம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள கிராமத்தில் எல்லையம்மன் கோயில் அமைந்துள்ளது. இக் கோயில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த 11-ஆம் தேதி கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கியது. தொடா்ந்து, சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) நான்காம் கால யாக பூஜை தொடங்கி நடைபெற்றது. இதையடுத்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மகா தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT