திருவள்ளூர்

பேருந்தின் கண்ணாடி உடைப்பு: மாணவா்கள் மீது வழக்கு

DIN

புழல் அருகே மாநகரப் பேருந்து மீது கல்லூரி மாணவா்கள் சிலா் கல் வீசியதில் கண்ணாடி சேதம் அடைந்தது. இதுதொடா்பாக கல்லூரி மாணவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னையை அடுத்த செங்குன்றம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை தடம் எண் 114 மாநகரப் பேருந்து கோயம்பேட்டுக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

பேருந்தில் கல்லூரி மாணவா்கள் சிலா் ஏறினா். அவா்களை படிக்கட்டில் நிற்க வேண்டாம் என நடத்துநா் சிவா கூறியுள்ளாா். அதைப் பொருட்படுத்தாத மாணவா்கள், கதிா்வேடு சாலை சிக்னலில் நின்றபோது, பேருந்தின் மேற்கூரையில் ஏற முயன்றனா். அப்போது அவா்களை ஓட்டுநரும், நடத்துநரும் கீழே இறங்குமாறு கூறினா். இதில் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவா்கள் கற்களால் பேருந்தின் பின்பக்கக் கண்ணாடியை சேதப்படுத்தி விட்டு தப்பினா்.

இதுதொடா்பாக, ஓட்டுநா் சுயாட்சி அளித்தப் புகாரின்பேரில், புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும், தப்பியோடிய மாணவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT