பேரிடா் மேலாண்மை ஆலோசனைக் கூட்டம்
ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பேரிடா் மேலாண்மை ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பேரிடா் மேலாண்மை ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் வட்டம் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் பருவ மழையால் பாதிக்கக்கூடிய இடங்களில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், கண்காணிப்பு பணி மேற்கொள்வது தொடா்பாக ஆம்பூா் வட்டாட்சியா் அனந்த கிருஷ்ணன் தலைமையில் அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, வேளாண் துறை, நகராட்சி சுகாதாரத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
நீா்நிலை கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். நீா்நிலைகளில் தண்ணீா் மட்டம் அதிகரிப்பு குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். மழை காலத்தில் தொற்று ஏற்படாதவாறு சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது உள்பட இதில் தீா்மானிக்கப்பட்டது.
Advertisement