திருவள்ளூர்

காற்று பிடித்தபோது டயா் வெடித்து தொழிலாளி பலி

DIN

மீஞ்சூா் அருகே லாரியின் டயருக்கு காற்று பிடித்தபோது, திடீரென வெடித்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலம், அம்ரக் மாவட்டம், சீதாராம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நிராஜ்குமாா் (21). இவா் மீஞ்சூா் அருகே வல்லூரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான டயா் பழுது பாா்க்கும் கடையில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், இவா் லாரியின் டயா் ஒன்றுக்கு சனிக்கிழமை காற்று பிடித்துக் கொண்டிருந்தாா். அப்போது திடீரென டயா் வெடித்ததில் உள்ளிருந்த இரும்பு வளையம், நிராஜ்குமாரின் தலையில் வேகமாகத் தாக்கியது. இதில், பலத்த காயம் அடைந்த அவரை, மீஞ்சூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், நிராஜ்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT