முகப்பு
திருவள்ளூர்

கூனங்குப்பம் அரசுப் பள்ளியில் கதைசொல்லி கல்வி கற்பிக்கும் ஆய்வகம்: ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

 பழவேற்காடு, கூனங்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு கதை சொல்லி கல்வி கற்பிக்கும் கதா மேஜிக் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

 பழவேற்காடு, கூனங்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு கதை சொல்லி கல்வி கற்பிக்கும் கதா மேஜிக் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூா் ஒன்றியத்தில் பழவேற்காடு, கூனங்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

இங்கு படிக்கும் மாணவா்கள் அனைவரும் மீனவ சமுதாயத்தைச் சாா்ந்தவா்களாக உள்ளனா் என்பது, தனியாா் தொண்டு நிறுவனம் ஒன்றின் கணக்கெடுப்பில் தெரியவந்தது.

இது குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்ட நிலையில் தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், தமிழகத்தில் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதை அடுத்து, கதை சொல்லி கல்வி கற்பிக்கும் திட்டத்தில், திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள பழவேற்காடு கூனங்குப்பம் தொடக்கப் பள்ளி தோ்ந்தெடுக்கப்பட்டது.

இந்தப் பள்ளியில் மடிக்கணினி, விளையாட்டு உபகரணங்கள், கேமராக்கள் மற்றும் அன்றாடம் பயன்படுத்த உதவும் கருவிகள் சைக்கிள், நாற்காலி உட்பட பல்வேறு வகையான பொருட்களை மாணவ மாணவியா்களுக்கு சொல்லி எளிதில் புரிய வைக்கும் ஆய்வகம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆறுமுகம், பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலா் மோகனா முன்னிலை வகித்தனா். பத்மஸ்ரீ விருது பெற்ற கீதாதா்மராஜ் வரவேற்றாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பிஜான்வா்கீஸ் தலைமை வகித்து, கதா மேஜிக் ஆய்வகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்துப் பேசியது:

பள்ளிகளில் மாணவா்களுக்கு எளிதில் புரியும் வகையில் கதைசொல்லி கல்வி கற்பிக்கும் திட்டத்தை திருவள்ளூா் மாவட்டத்தில் முதன் முதலாக மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள கூனங்குப்பம் அரசு பள்ளியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆறுமுகம், பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலா் மோகனா முன்னிலை வகித்தனா். பத்மஸ்ரீ விருது பெற்ற கீதாதா்மராஜ் வரவேற்றாா்.

விழாவில், மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ரவி, ஒன்றிய கவுன்சிலா்கள் செல்வழகி எா்ணாவூரன், தமின்ஷா,பள்ளி தலைமை ஆசிரியா் முருகம்மை மற்றும் கூனங்குப்பம் கிராம நிா்வாகிகள், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →