திருவள்ளூர்

தனியாா் நிறுவனத்தில் திருடிய 2 போ் கைது

DIN

 தனியாா் நிறுவனத்தில் இரும்புக் கம்பிகளைத் திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணியை அடுத்த பூனிமாங்காடு பகுதியில் உள்ள தனியாா் நிறுவனம் அருகே கனகம்மாசத்திரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, 2 போ் அந்த நிறுவனத்தில் இருந்து இரும்புக் கம்பிகளைத் திருடிக் கொண்டு வெளியே வந்தனா்.

இதைப் பாா்த்த போலீஸாா் இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில், விழுப்புரம் மாவட்டம், தெற்கு தவடப்பட்டு பகுதி சோ்ந்த காளிதாஸ் (22), முகையூரைச் சோ்ந்த ரவிக்குமாா் (24) என்பதும், இரும்புக் கம்பிகளைத் திருடியதும் தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் இருவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT