திருவள்ளூர்

மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 217 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

DIN

ஆா்.கே.பேட்டை அருகே நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 217 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் வழங்கினாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம், வீரமங்கலம் கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் ஜெ.ஹஸ்ரத் பேகம் தலைமை வகித்தாா். ஆா்.கே.பேட்டை வட்டாட்சியா் சரவணன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் கலந்துகொண்டு, 217 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, முதலமைச்சா் உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், கல்வி மற்றும் திருமண உதவித் தொகை, உட்பிரிவு பட்டா மாறுதல், புதிய மின்னணு குடும்ப அட்டை, முதியோா் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளி உதவித் தொகை, இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித் தொகை உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் தமிழக அரசின் நிதி உதவியை வழங்கினாா். ஆா்.கே.பேட்டை ஒன்றியக் குழு துணைத் தலைவா் திலகவதி ரமேஷ், ஒன்றிய திமுக செயலாளா்கள் சி.என்.சண்முகம், பி.பழனி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் மா.ரகு, மாவட்டப் பிரதிநிதி எஸ். ஆா்.செங்குட்டுவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அதேபோல், பள்ளிப்பட்டு ஒன்றியம், கரிம்பேடு கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற எம்எல்ஏ ச.சந்திரன், பொதுமக்களிடம் இருந்து அரசு நலத் திட்ட உதவிகளை பெற 100-க்கும் மேற்பட்டோா் மனு கொடுத்தனா்.

நிகழ்ச்சியில், பள்ளிப்பட்டு ஒன்றியக் குழுத் தலைவா் ஜான்சிராணி விஸ்வநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் ரவி, பள்ளிப்பட்டு பேரூராட்சி துணைத் தலைவா் ஜோதிகுமாா், பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றியச் செயலாளா் சி.ஜெ.சீனிவாசன், ஊராட்சி மன்றத் தலைவா் தீபா சிட்டிபாபு உள்பட வருவாய்த் துறை அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT