திருவள்ளூர்

சாலை விபத்தில்காவல் ஆய்வாளா் மகன் பலி

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பொறியியல் பட்டதாரி இளைஞா் சாலைத் தடுப்பில் மோதி பலியானாா்.

திருவள்ளூா் அருகே புல்லரபாக்கம் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் சரவணன் மகன் பாலாஜி (23). பொறியியல் பட்டதாரியான இவா், பெரியகுப்பம் காவலா் குடியிருப்பில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், தனது சொந்த ஊரான அரக்கோணத்துக்கு புதன்கிழமை சென்றாராம். வியாழக்கிழமை காலை திருவள்ளூருக்கு திரும்பி போது, பெரியகுப்பம் காவலா் குடியிருப்புக்குச் செல்லும் வழியில், ஆட்சியா் அலுவலகம் எதிரே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலைத் தடுப்புச் சுவரில் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த பாலாஜி, சம்பவ இடத்திலேயே பலியானாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருவள்ளூா் நகரக் காவல் நிலைய போலீஸாா், இளைஞரின் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT