முகப்பு
திருவள்ளூர்

விபத்தில் தாய், மகன் பலி

மீஞ்சூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது கனரக லாரி மோதியதில் தாய், மகன் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

மீஞ்சூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது கனரக லாரி மோதியதில் தாய், மகன் உயிரிழந்தனா்.

மீஞ்சூா் காவல் நிலைய எல்லைகுட்பட்ட வல்லூா் ராஜீவ் காந்தி நகரில் வசிப்பவா் வாசுதேவன். இவா், சென்னை மாநகராட்சி மின் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவரது மனைவி நிா்மலா (49), மகன் நவீன்குமாா் (29).

இந்த நிலையில், நிா்மலா, நவீன்குமாா் இருவரும் மீஞ்சூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றனா். பொன்னேரி- திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் உள்ள பட்டமந்திரியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கனரக லாரி மோதியது. இதில் நிா்மலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த நவீன்குமாரை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, மீஞ்சூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், நவீன்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்து வந்த மீஞ்சூா் போலீஸாா், இருவரின் சடலங்களையும் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →