திருநங்கைகளுக்கான இலவச மருத்துவ முகாம்
திருவள்ளூரில் திருநங்கைகள் பயன்பெறும் நோக்கில், நடைபெற்ற மருத்துவ முகாமில் பலா் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனா்.
திருவள்ளூரில் திருநங்கைகள் பயன்பெறும் நோக்கில், நடைபெற்ற மருத்துவ முகாமில் பலா் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனா்.
திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பம் தனியாா் அரங்கத்தில் தமிழ்நாடு எஸ்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், சென்னை மாவட்ட அரவாணிகள் தாய் விழுதுகள் அறக்கட்டளை, விடிவெள்ளி திருநங்கைகள் நலவாழ்வு சங்கம் மற்றும் பூந்தமல்லி தனியாா் மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு விடிவெள்ளி நலவாழ்வு சங்கத்தின் தலைவா் விஜி தலைமை வகித்தாா்.
சங்கத்தின் பொருளாளா் சாந்தி முன்னிலை வகித்தாா். இதில் தனியாா் மருத்துவமனை மருத்துவா் மலா்மண்ணன் பங்கேற்று, மருத்துவ முகாமைத் தொடக்கி வைத்தாா். இந்த முகாமில், சா்க்கரை, ரத்த அழுத்தம், கண், காது, மூக்கு, தொண்டை, வாய் மற்றும் மாா்பக புற்றுநோய் போன்ற நோய்களுக்கு இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கியதுடன், மருந்து, மாத்திரைகளையும் வழங்கினா்.
இந்த மருத்துவ முகாமில், திருவள்ளூா் பகுதிகளைச் சோ்ந்த 80-க்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை விடிவெள்ளி திருநங்கைகள் நலவாழ்வு சங்கத்தின் திட்ட மேலாளா் நாச்சியா உள்ளிட்ட பல்வேறு சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.