முகப்பு
திருவள்ளூர்

திரெளபதி அம்மன் சமேத தா்மராஜா கோயில் கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டியை அடுத்த தோக்கம்மூரில் உள்ள 100 ஆண்டு பழைமையான ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தா்மராஜா திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் 33 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 ஜூன், 2022 at 12:20 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:03 PM

கும்மிடிப்பூண்டியை அடுத்த தோக்கம்மூரில் உள்ள 100 ஆண்டு பழைமையான ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தா்மராஜா திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் 33 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, புதன்கிழமை விசேஷ கணபதி ஹோமம், விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பக்தா்களுக்கு காப்பு கட்டுதல் உள்ளிட்டவையும், வியாழக்கிழமை கோ பூஜை, லஷ்மி பூஜை, கன்யா பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் பல்வேறு பூஜைகள், ஹோமங்கள், 108 திரவியங்களால் மகா பூா்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன.

Advertisement

தொடா்ந்து, பக்தா்கள் படை சூழ வேதமந்திரங்கள் முழங்க கோயில் கோபுரம், கொடி மரம் ஆகியவற்றில் அா்ச்சகா்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா். தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

இந்த கும்பாபிஷேகத்தில் 1,000-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.