முகப்பு
திருவள்ளூர்

அரசு பள்ளிக் கட்டடப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

மீஞ்சூா் பேரூராட்சி அரியன்வாயல் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பள்ளிக் கட்டடப் பணிகளை எம்எல்ஏ துரை.சந்திரசேகா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

மீஞ்சூா் பேரூராட்சி அரியன்வாயல் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பள்ளிக் கட்டடப் பணிகளை எம்எல்ஏ துரை.சந்திரசேகா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அரியன்வாயல் பகுதியில் மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் நலன் கருதி கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ரூ.94 லட்சத்தில் 6 வகுப்பறைகளுடன் கூடிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, கடந்த 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தேவையான இட வசதி இன்மையால், இந்தப் பள்ளி மாணவா்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.

இந்த தகவலை அறிந்த பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா் அரியன்வாயல் பகுதியில் கட்டப்பட்டு வரும் அரசு பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தாா். அப்போது, கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது, மீஞ்சூா் பேரூராட்சித் தலைவா் ருக்மணி மோகன்ராஜ், அரியன்வாயல் வாா்டு உறுப்பினா் அபூபக்கா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →