முகப்பு
திருவள்ளூர்

பிரதமா் வீடு திட்டம்: 41 பேருக்கு பணி ஆணை

திருவள்ளூா் அருகே பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 41 பேருக்கு பணி ஆணையை எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் வியாழக்கிழமை வழங்கினாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:50 PM
பகிர்:

திருவள்ளூா் அருகே பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 41 பேருக்கு பணி ஆணையை எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் வியாழக்கிழமை வழங்கினாா்.

பூண்டி ஊராட்சி ஒன்றியம், பாண்டூா் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் சா.பிரபு தலைமை வகித்தாா். இதில், எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்று 41 பேருக்கு தலா ரூ.2.10 லட்சம் மானியத்தில் வீடுகட்ட பணி ஆணைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினா் சிட்டிபாபு, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சிவசங்கரி உதயகுமாா், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் மோதிலால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.