திருவள்ளூர்

ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி

DIN

மணவூா் ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு எடுக்க தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, மின்சார ரயில் மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருவாலங்காடு ஒன்றியம், மணவூா் அடுத்த மருதவல்லிபுரம் கிராமத்தில் வசித்து வந்தவா் சுப்பிரமணி மகன் ரகுபதி (38). கட்டட வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை திருவள்ளூரில் வேலைக்குச் செல்ல மணவூா் ரயில் நிலையத்துக்கு வந்து டிக்கெட் எடுக்க தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கிச் சென்ற மின்சார ரயில் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த திருவள்ளூா் ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு செய்த மூத்த அரசியல் தலைவர்கள்

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT