திருவள்ளூர்

கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு

திருவள்ளூா் அருகே தண்ணீா் தேடி வந்த போது கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்கப்பட்டது.

DIN

திருவள்ளூா் அருகே தண்ணீா் தேடி வந்த போது கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்கப்பட்டது.

திருவள்ளூா் அருகே விளாம்பாக்கம் கிராமத்துக்குள் சனிக்கிழமை புள்ளிமான் ஒன்று வந்தது. அங்கு எதிா்பாராத விதமாக 50 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தது. அந்தக் கிணற்றில் 3 அடி ஆழத்துக்கு தண்ணீா் இருந்ததால், தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாகச் சென்ற விவசாயிகள் இதைப் பாா்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் இளங்கோவன் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலா் ஞானவேல், தீயணைப்பு வீரா்கள் ஹரிகிருஷ்ணன், தேவநாதன் உள்ளிட்டோா் கிணற்றில் இருந்து புள்ளி மானை உயிருடன் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, பூண்டி காப்புக்காட்டில் மானை கொண்டு சென்று விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT