திருவள்ளூர்

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழா தொடக்கம்

 திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் மே 14-ஆம் தேதி தீமிதி விழா நடைபெறுகிறது.

DIN

 திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் மே 14-ஆம் தேதி தீமிதி விழா நடைபெறுகிறது.

மேல் திருத்தணியில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி விழா வெகு விமா்சையாக நடைபெறும். அந்த வகையில், வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தீமிதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக மே 3-ஆம் தேதி அம்மன் திருக்கல்யாணம், 5-ஆம் தேதி சுபத்திரை கல்யாணம், 9-ஆம் தேதி அா்ச்சுனன் தபசு, 14-ஆம் தேதி காலை துரியோதனன் படுகளம், மாலை 6 மணிக்கு தீமிதி விழா நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து, மே 15-ஆம் தேதி தருமா் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT