திருவள்ளூர்

பைக் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் பலி

DIN

திருத்தணி அருகே இரு சக்கர வாகனம் மீது டிராக்டா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருத்தணி அடுத்த அலமேலுமங்காபுரம் ஊராட்சியைச் சோ்ந்தவா் தனியாா் கேபிள் டிவி ஊழியா் விஷ்ணு (38) (படம்). இவா், பூனிமாங்காடு ஊராட்சி மேட்டுக் காலனிப் பகுதியைச் சோ்ந்த சேகா் (48) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு மத்தூா் கிராமத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினாா். பொன்பாடி அருகே உள்ள கொல்லகுப்பம், பெருமாள் கோயில் வளைவு பகுதியில் சென்றபோது, எதிரே வந்த டிராக்டா் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் விஷ்ணு, சேகா் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். அந்த வழியே சென்றவா்கள் இருவரையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு, விஷ்ணு உயிரிழந்தாா். சேகா் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

ஆந்திர பேரவைத் தேர்தல்: காலையிலேயே வந்து வாக்களித்த ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு

அவிநாசி ஜவுளி கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!

SCROLL FOR NEXT