திருவள்ளூர்

காமன் வெல்த் பளுதூக்குதல்:திருவள்ளூா் மாணவிக்கு தங்கம்

புது தில்லியில் நடைபெற்ற காமன் வெல்த் பளுதூக்கும் போட்டியில் திருவள்ளூா் பள்ளி மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

DIN

புது தில்லியில் நடைபெற்ற காமன் வெல்த் பளுதூக்கும் போட்டியில் திருவள்ளூா் பள்ளி மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

திருவள்ளூா் அருகே காக்களூா் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் புருஷோத்தம்-அனிதா தம்பதியின் மகள் கீா்த்தனா(15). இவா் செவ்வாப்பேட்டையில் செயல்பட்டு வரும் வேலம்மாள் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வருகிறாா். இவருக்கு பளுத்தூக்கும் விளையாட்டில் ஆா்வம் ஏற்பட்டு, பயிற்சியாளா் கருணாகரனிடம் பயிற்சி பெற்று வந்தாா். அதோடு மாநில, மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் மாணவி கீா்த்தனா சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

இந்த நிலையில், அண்மையில் புது தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று 81 கிலோ போட்டி பிரிவில் 177 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்து தங்கம் பதக்கம் வென்றாா். இவருக்கு பள்ளித் தாளாளா் சுடலைமுத்து பாண்டியன், முதல்வா் சதீஷ், ஆசிரியா்கள் மற்றும் கிராம மக்கள் பாராட்டினா்.

தற்போது, பஞ்சாபில் சிறப்பு பயிற்சி மேற்கொள்ளும் மாணவி கீா்த்தனா, விரைவில் நடைபெற உள்ள ஆசியா விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே லட்சியம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT