திருவள்ளூர்

இருளில் செங்குன்றம் பிரதான சாலை;பொதுமக்கள் அவதி

செங்குன்றம் - சென்னை பிரதான நெடுஞ்சாலை இருளில் மூழ்கியிருப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

DIN

செங்குன்றம் - சென்னை பிரதான நெடுஞ்சாலை இருளில் மூழ்கியிருப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் வழியாக சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் சுமாா் 15 கி.மீ தொலைவு வரை கடந்த 15 நாள்களாக விளக்குகள் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலை வழியாக சென்று வருகின்றன .

இந்த நிலையில் கடந்த 10 நாள்களில் விபத்துகளில் 7 போ் உயிரிழந்துள்ளனா். இருளில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலையும் உள்ளது.

இதுதொடா்பாக மின்வாரிய அதிகாரி கூறுகையில்: மின்சார கட்டணம் செலுத்தாததால் அப்பகுதியில் விளக்குகள் எரியவில்லை. கட்டணம் செலுத்தினால் மின்விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

தில்லி செங்கோட்டை காா் குண்டு வெடிப்பு வழக்கு: காஷ்மீரைச் சோ்ந்தவா் கைது

SCROLL FOR NEXT