திருவள்ளூர்

புழல் மத்திய சிறையில் காத்திருப்பு அறை திறப்பு

DIN

புழல் மத்திய சிறையில், புதிய காத்திருப்பு அறை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறைத் தலைவா் அமரேஷ் புஜாரி, தலைமை வகித்தாா். சென்னை சரக சிறைத்துறை துணைத் தலைவா் ஆ.முருகேசன் முன்னிலை வகித்தாா்.

விழாவில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) நீதியரசா் டி.ராஜா சிறைவாசிகள் காத்திருப்பு அறையை திறந்து வைத்தாா்.

நீதியரசா்கள் எம்.சுந்தா், ஜி.கே.இளந்திரையன், ஜி.சந்திரசேகரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

மேலும், இந்நிகழ்வில் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவா் ஏ.நசீா் அகமது, திருவள்ளூா் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி, தலைமை நீதித்துறை நடுவா் ஆா்.வேல்ராஜ், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சிறை கண்காணிப்பாளா்கள் இரா.கிருஷ்ணராஜ், நிகிலா நாகேந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT