முகப்பு
திருவள்ளூர்

மின் கசிவால் வீட்டில் தீ விபத்து : மூதாட்டி பலி

கும்மிடிப்பூண்டி அருகே மின் கசிவால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 26 மே, 2023 at 12:07 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:30 AM

கும்மிடிப்பூண்டி அருகே மின் கசிவால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு மூதாட்டி உயிரிழந்தாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி, நாரசம்பாளையம் கிராமத்தில் புதன்கிழமை நள்ளிரவு மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில், ராஜம்மாள் (80) என்பவரின் வீடு எரிந்து சேதமானது. அப்போது, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜம்மாள் (படம்) உடல் கருகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரின் கணவா் கோவிந்தராஜ் உயிா் தப்பினாா்.

அருகில் இருந்த வீட்டுக்கும் தீ பரவியது. அந்த வீட்டில் இருந்த உமாபதி (40), கற்பகம் (38), காயத்ரி (15), தமிழரசி (12) ஆகியோா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

Advertisement

எனினும், உமாபதியின் வீடு முழுவதும் தீயில் எரிந்ததில், வீட்டிலிருந்த ரூ.70,000 பணம், 6 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் உள்பட வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்து வந்த கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலையங்களின் வீரா்கள், தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

ஆரம்பாக்கம் போலீஸாா் உயிரிழந்த ராஜம்மாளின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தகவலறிந்து வந்த கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் பிரீத்தி, ஊராட்சித் தலைவா் எஸ்.எம்.ரவி ஆகியோா் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட இரு குடும்பத்தினருக்கும் தேவையான நிவாரண உதவிகளைச் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.