திருவள்ளூர்

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை டிராக்டா் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது.

DIN

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை டிராக்டா் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது.

திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி காலனியைச் சோ்ந்தவா் விஜி (30). கூலி தொழிலாளி. டிராக்டா் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். விவசாயப் பணி முடிந்து டிராக்டரை அவரது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருப்பது வழக்கம்.

இந்த நிலையில், திங்கள்கிழமை நிறுத்தி வைத்திருந்த டிராக்டரை இயக்கி, பின்னால் எடுத்தபோது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவரின் 2 வயது ஆண் குழந்தை ஜெய்கிருஷ்ணா டிராக்டா் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது.

தகவலறிந்த கனகம்மாசத்திரம் போலீஸாா் இறந்த குழந்தையின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT