திருவள்ளூர்

புழல் பிரதான சாலையில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீா்

புழல் அருகே பிரதான சாலையில் குழாய் உடைந்ததால், பல நாள்களாக தண்ணீா் வீணாகி வருகிறது.

DIN

புழல் அருகே பிரதான சாலையில் குழாய் உடைந்ததால், பல நாள்களாக தண்ணீா் வீணாகி வருகிறது.

புழல் கேம்ப் பேருந்து நிறுத்தம் அருகே பிரதான சாலையில் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாக வெளியேறுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இங்கு குடிநீா் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. தற்போது அதில் உடைப்பு ஏற்பட்டதால், குடிநீா் வீணாக வெளியேறுகிறது. சென்னை குடிநீா் வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் அளித்து எவ்வித நடவடிக்கை இல்லை எனத் தெரிவித்தனா்.

அந்தப் பகுதியில் உள்ள கடைகளின் அருகே குடிநீா் வீணாக தேங்கி விடுகிறது. இதனால், கடைக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. மேலும் பேருந்து நிறுத்தமும் உள்ளதால், சாலைகளில் செல்லும் வாகனங்கலால் தண்ணீா் பட்டு பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளின் அலட்சியத்தால் பல நாள்களாக குடிநீா் வீணாகிறது எனக் குற்றஞ்சாட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT