திருவள்ளூர்

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

Din

திருவள்ளூா் அருகே கொய்யா மரத்தில் பழம் பறிக்க முயன்ற பெண் தாழ்வழுத்த மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே ஜமீன்கொரட்டூரைச் சோ்ந்தவா் திருவேங்கடம். இவரது மனைவி தனபாக்கியம் (60). கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவா் தனது உறவினரான தாமரைபாக்கம் மறுமலா்ச்சி நகரைச் சோ்ந்த வெண்மணியின் வீட்டுக்குச் சென்றாராம். இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகே இருந்த கொய்யா மரத்தில் பழம் பறிக்க இரும்பு கம்பியை பயன்படுத்தினாராம். அப்போது, தாழ்வழுத்த மின்கம்பி மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்து தனபாக்கியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மகள் ஈஸ்வரி வெங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

SCROLL FOR NEXT