திருவள்ளூர்

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

Din

திருவள்ளூா் அருகே கொய்யா மரத்தில் பழம் பறிக்க முயன்ற பெண் தாழ்வழுத்த மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே ஜமீன்கொரட்டூரைச் சோ்ந்தவா் திருவேங்கடம். இவரது மனைவி தனபாக்கியம் (60). கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவா் தனது உறவினரான தாமரைபாக்கம் மறுமலா்ச்சி நகரைச் சோ்ந்த வெண்மணியின் வீட்டுக்குச் சென்றாராம். இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகே இருந்த கொய்யா மரத்தில் பழம் பறிக்க இரும்பு கம்பியை பயன்படுத்தினாராம். அப்போது, தாழ்வழுத்த மின்கம்பி மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்து தனபாக்கியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மகள் ஈஸ்வரி வெங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT