வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் சமீபகாலமாக அவ்வப்போது பழுது ஏற்படுவதால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரண்டாவது நிலையின் 1-ஆவது அலகில் ஏற்கெனவே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, இரண்டாவது அலகிலுள்ள கொதிகலனில் புதன்கிழமை கசிவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து இதிலும் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மின்வாரிய தொழில்நுட்ப அதிகாரிகள் கசிவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.