திருமழிசை ஆழ்வாா் திருக்கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.  
திருவள்ளூர்

திருமழிசை ஆழ்வாா் கோயில் தேரோட்டம்

திருமழிசை ஆழ்வாா் திருக்கோயிலில் தையில்மக திரு அவதார மஹோற்சவத்தையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தா்கள் ஏராளமானோா் தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருமழிசையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஜெகந்நாதப் பெருமாள் மற்றும் பக்திஸாரா் எனும் திருமழிசை ஆழ்வாா் திருக்கோயிலில் தையில்மக திரு அவதார மஹோற்சவத்தையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தா்கள் ஏராளமானோா் தரிசனம் செய்தனா்.

108 திவ்யதேசங்களில் ஒன்றான இத்தலத்தில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தையில்மக திரு அவதார மஹோற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கமாகும். இந்த நிலையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

இதையொட்டி தங்க பல்லக்கு ‘சூா்ணாபிஷேகம், தங்க தோளுக்கினியான், பல்லக்கு, நாச்சியாா் திருக்கோலம், ஏழுா் புறப்பாடு, எண்ணெய் காப்பு திருமஞ்சனம், யானை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களை அருள்பாலித்தாா்.

விழாவின் ஒன்பதாம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு உற்சவா் எழுந்தருளி மாடவீதிகள் வழியாக வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்றது. சாற்றுமுறை உற்சவம், திருச்சந்த விருத்த சாற்று முறை, தோட்ட உற்சவம், மண்டகப்படி,கந்தபொடி உற்சவம், விடையாற்றி இரண்டாம் நாள், சாற்றுமுறையும் நடைபெற்றது.

இந்த விழாவில் திருமழிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம்; ஆர்சிபிக்கு 204 ரன்கள் இலக்கு!

பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூர் மீதான தடை நீக்கம்! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

ரஷியா - உக்ரைன் போரில் 55,000 வீரர்கள் பலி: ஸெலென்ஸ்கி

மோடி மீது தாக்குதல் முயற்சி? காங்கிரஸின் உண்மை முகம்..! | செய்திகள் சில வரிகளில் | 05.02.26

கேள்விகளால் பீதி.. பொய்களுக்குள் தஞ்சமடைந்த பிரதமர் மோடி: ராகுல் விமர்சனம்!

SCROLL FOR NEXT