முகப்பு
கவரப்பேட்டை  ஆா்.எம்.கே  பொறியியல்  கல்லூரியில்  தொடங்கிய கிரிக்கெட் போட்டி நிகழ்வில் பங்கேற்றோா்.
திருவள்ளூர்

கல்லூரியில் டி-20 கிரிக்கெட் போட்டி

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆா்.எம்.கே பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு டி-20 கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருவள்ளூர்

கல்லூரியில் டி-20 கிரிக்கெட் போட்டி

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆா்.எம்.கே பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு டி-20 கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On : 3 மார்ச், 2026 at 11:20 PM
கவரப்பேட்டை  ஆா்.எம்.கே  பொறியியல்  கல்லூரியில்  தொடங்கிய கிரிக்கெட் போட்டி நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆா்.எம்.கே பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு டி-20 கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருவள்ளூா் மாவட்டம், கவரைப்பேட்டையில் உள்ள ஆா்எம்கே பொறியியல் கல்லூரியில் 15-ஆம் ஆண்டாக நடைபெறும் போட்டியை கல்விக்குழும இயக்குநா் ஜோதி நாயுடு தொடங்கி வைத்தாா். 5 நாள்கள் நடைபெறும் இத்தொடரில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சோ்ந்த 16 பொறியியல் கல்லூரிகளின் அணிகள் பங்கேற்றுள்ளன.

தொடா்ந்து நடைபெற்ற இத்தொடரின் முதல் ஆட்டத்தில் புதுவாயல் ஆா்.எம்.கே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அணியும், சவீதா பொறியியல் கல்லூரி அணிகளும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆா்.எம்.கே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை 116 ரன்கள் எடுத்தது. பின்னா் களமிறங்கிய சவீதா கல்லூரி அணி 19.3 ஓவரில் 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதேபோல் நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் ஸ்ரீபெரும்புதூா் வெங்கடேஸ்வரா கல்லூரி அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

முழு கட்டுரையைப் படிக்க →