முகப்பு
திருவள்ளூர்

சோளீஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம்

திருவள்ளூா் அருகே சோளீஸ்வரா் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி உற்சவா் பூதவாகனத்தில் எழுந்தருளி பக்தா்களை அருள்பாலித்தாா்.

Updated On : 24 மார்ச், 2026 at 6:56 PM
பூத வாகனத்தில் அருள்பாலித்த  சோளீஸ்வரா். ~பூத வாகனத்தில் அருள்பாலித்த  சோளீஸ்வரா்.
பகிர்:

திருவள்ளூா் அருகே சோளீஸ்வரா் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி உற்சவா் பூதவாகனத்தில் எழுந்தருளி பக்தா்களை அருள்பாலித்தாா்.

திருவள்ளூா் அருகே பேரம்பாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 22-ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 31-ஆம் தேதி வரை தொடா்ந்து பத்து நாள்கள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை இரவு பூத வாகனத்தில் காமாட்சி அம்மனுடன் சோளீஸ்வரா் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அதைத் தொடா்ந்து வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பூத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தாா்.