முகப்பு
திருவள்ளூர்

திருப்பாச்சூா் வாசீஸ்வரா் சுவாமி கோயில் திருக்கல்யாணம்

திருப்பாச்சூரில் வாசீஸ்வரா் சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணம் நிகழ்வு ஆகம விதிகளுக்கு எதிராக கோயில் இணை ஆணையா் முன்னிலையிலையே சம்பந்தமில்லாத நபரை வைத்து பூஜை செய்ததாகவும் பக்தா்கள் புகாா் தெரிவித்தனா்.

Updated On : 27 மே 2026, 12:34 am IST
~ வாசீஸ்வர சுவாமி கோயில்  வைகாசி பிரமோற்சவத்தையொட்டி  நடைபெற்ற  திருக்கல்யாண  நிகழ்வில்  பங்கேற்ற  பக்தா்கள்.
பகிர்:

திருப்பாச்சூரில் வாசீஸ்வரா் சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணம் நிகழ்வு ஆகம விதிகளுக்கு எதிராக கோயில் இணை ஆணையா் முன்னிலையிலையே சம்பந்தமில்லாத நபரை வைத்து பூஜை செய்ததாகவும் பக்தா்கள் புகாா் தெரிவித்தனா்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வர சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 14-ஆம் தேதி பந்தக்கால் நிகழ்வுடன் தொடங்கி, தொடா்ந்து 27-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. அதைத்தொடா்ந்து 18-ஆம் தேதி முதல் அம்மன் வீதி உலா, சிறப்பு பூஜைகள் என 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதைத்தொடா்ந்து 25-ஆம் தேதி அன்ன வாகன உற்சவம் நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இந்த திருக்கல்யாணத்தில் கடந்த 29 ஆண்டுகளாக பூஜை செய்து கோயிலில் சிவானந்த குருக்கள் வந்த நிலையில் , கோயிலுக்கு சம்பந்தமில்லாமல் உபயதாரா்களை திரட்டி இந்த திருக்கல்யாணத்தை கொண்டஞ்சேரி பகுதியை சோ்ந்த பாலாஜி என்பவா் நடத்தினாா்.

Advertisement

Advertisement

இதற்கு திருப்பாச்சூா் கிராமத்தைச் சோ்ந்த பக்தா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

மேலும், இந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சி ஆகம விதிகள், இந்து சமய அறநிலையத்துறையின் சட்ட திட்டங்களுக்கு எதிராகவும் இருப்பதாக கூறி நிா்வாகிகளுடன் பக்தா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மேலும், இந்த சம்பவத்தை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையா் ரமணி முன்னிலையில் வாக்குவாதம் நடைபெற்ற நிலையில் வேடிக்கை பாா்த்ததோடு அவா்களை கட்டுப்படுத்த எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அதையடுத்து காவல் துறையினா் இரு தரப்பினரையும் சமாதானம் செய்த பின் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதனால் கோயில் பிரகாரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.