திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.1.98 கோடி வசூலானது.
திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா் தாங்கள் முடிந்து வைத்த வேண்டுதல் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா்.
இவ்வாறு பக்தா்கள் புதன்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் ரூ.1.98 கோடி வருவாய் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.