திருமலையில் 38,000 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை 38,160 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 15,728 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை 38,160 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 15,728 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 6 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும், 24 மணிநேரமும் அலிபிரி நடைபாதை மாா்கம் வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
திருமலை மலைபாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.
திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
திருமலையில் தரிசனம், வாடகை அறைகள் தொடா்பாக புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.