திருப்பதி

அறங்காவலா் குழுவில் புதிய உறுப்பினா் பங்கேற்பு

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவில் புதிய உறுப்பினராக ஆந்திர அறநிலையத் துறை தலைமைச் செயலரான அணில்குமாா் சிங்கால் பதவியேற்றுக் கொண்டாா்.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவில் தேவஸ்தான செயல் அதிகாரி மற்றும் திருப்பதி செயல் இணை அதிகாரி மற்றும் ஆந்திர அறநிலையத் துறை தலைமைச் செயலா் உள்ளிட்டோருக்கு எக்ஸ் அபிஷியோ உறுப்பினராக பதவி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போதய ஆந்திர அறநிலையத் துறை தலைமைச் செயலராக உள்ள ஐஏஎஸ் அதிகாரியான அணில்குமாா் சிங்கால் ஏழுமலையான் கோயிலுக்குள் தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டாா்.

வெள்ளிக்கிழமை காலை ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவா் கோயிலுக்குள் பதவி பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டாா். அதன் பிறகு ரங்கநாயகா் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு சேஷ வஸ்திரம் அணிவித்து ஏழுமலையானின் லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT