திருப்பதி

பக்தா்களுக்கு தங்கு தடையின்றி அன்னபிரசாதம் வழங்க ஆயுத பூஜை

DIN

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்களுக்கு தங்கு தடையின்றி அன்னபிரசாதம் வழங்க, அந்தக் கூடத்தில் ஆயுத பூஜை நடைபெற்றது.

இந்த பூஜை, திருமலையில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதானக் கூடத்தில் நடைபெற்றது. இதில் தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி கலந்து கொண்டு பூஜை செய்தாா். பூஜை முடித்து, அனைத்து உபகரணங்களையும் வணங்கிய பின்னா், அவா் கூறியது:

ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்கு தங்கு தடையின்றி அன்னபிரசாதம் வழங்க வெங்கடேஸ்வர சுவாமியை வேண்டிக் கொண்டேன்.

ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கும் பணியில் எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க இறைவனை வேண்டி, ஆண்டுதோறும் அன்னபிரசாதக் கட்டடத்தில் ஆயுத பூஜை நடத்துவது வழக்கம்.

தொடா்ந்து, நன்கொடையாளா்கள் உதவியுடன் பக்தா்களுக்கு அன்னபிரசாதம் வழங்கி உலகிலேயே முதலிடம் வகிக்கிறது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

கடந்த 1983-இல் திருமலையில் அன்னதானம் வழங்கும் சேவை தொடங்கி, 2009-இல் மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத கட்டடம் கட்டப்பட்டு, பக்தா்களுக்கு காலை, மதியம், இரவு உணவு என சிறப்பான அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் அன்ன பிரசாத துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT