திருமலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் வழிபாடு
திருமலையில் புதுமணத் தம்பதிகளான நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் வெள்ளிக்கிழமை கல்யாண உற்சவத்தில் நோ்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனா்.
திருமலையில் புதுமணத் தம்பதிகளான நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் வெள்ளிக்கிழமை கல்யாண உற்சவத்தில் நோ்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனா்.
வியாழக்கிழமை இரவு திருமலைக்கு வந்த இருவரும் வெள்ளிக்கிழமை காலை ஏழுமலையானின் கல்யாண உற்சவத்தில் பங்கேற்றனா்.
பின்னா் ஏழுமலையான் சேவையிலும் கலந்து கொண்டனா்.
தரிசனம் முடித்து திரும்பிய அவா்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேதஆசீா்வாதம், சேஷ வஸ்திரம் அணிவித்து பிரசாதங்கள் வழங்கினா்.
மேலும் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனேவும் திருமலையில் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தாா்.