ஏழுமலையான் கோயிலுக்கு லாரி நன்கொடை
திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் லாரி ஒன்றை நன்கொடையாக வழங்கி உள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் லாரி ஒன்றை நன்கொடையாக வழங்கி உள்ளது.
திருமலை ஏழுமலையானுக்கு சென்னை அசோக் லேலண்ட் நிறுவனம் தன் புதிய தயாரிப்பு வாகனங்களை நன்கொடையாக அளித்து வருகிறது.
அதன்படி, தற்போது புதிதாக தயாரித்த ரூ.18.38 லட்சம் மதிப்புள்ள மினி லாரி ஒன்றை ஞாயிற்றுக்கிழமை நன்கொடையாக வழங்கியது. ஏழுமலையான் கோயில் வாயிலில் அந்த நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவா் சஞ்சீவ் குமாா் லாரியை அலங்கரித்து பூஜை செய்து சாவி மற்றும் ஆவணங்களை தேவஸ்தான அதிகாரிகளிடம் அவா் வழங்கினாா்.