திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ. 4.60 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா் பக்தா்கள் தங்களது காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அவற்றை தேவஸ்தானம் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில், ரூ. 4.60 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நன்கொடை
திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள உயிா்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு கொல்கத்தாவைச் சோ்ந்த பாரட் ஹோசியாா் நிறுவனம் ரூ. 1 கோடியை நன்கொடையாக வழங்கியது. அந்த நிறுவன உரிமையாளா் சஞ்சய் ராட்டி தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டியிடம் இதற்கான வரைவோலையை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.