ஏழுமலையான் கோயிலில் 63,300 பக்தா்கள் வழிபாடு
திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 63,332 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 26,656 போ் தலை முடிகாணிக்கை செலுத்தினா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 63,332 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 26,656 போ் தலை முடிகாணிக்கை செலுத்தினா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 15 அறைகளில் பக்தா்கள் காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்துக்கு 12 மணிநேரம் ஆனது. ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 1 முதல் 2 மணிநேரம் ஆனது.
தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.