திருப்பதி

சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

DIN

திருவள்ளூா் சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

திருவள்ளூா் நகராட்சி அலுவலகம் அருகே சாா்- ஆட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அவா் கேட்டறிந்தாா்.

சாா்- ஆட்சியா் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், மனுக்கள் குறித்த விவரங்கள், பதிவேடுகளை தணிக்கை செய்தாா். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு தாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினாா். ஆய்வின்போது, சாா் -ஆட்சியா் மகாபாரதி, வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT