திருப்பதி

ஜூன் 2-இல் காஞ்சி கருட சேவை

திருப்பதி அடுத்த நாகலாபுரத்தில் வரும் ஜூன் 2-ஆம் தேதி காஞ்சி கருட சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

DIN

திருப்பதி அடுத்த நாகலாபுரத்தில் வரும் ஜூன் 2-ஆம் தேதி காஞ்சி கருட சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியை அடுத்த நாகலாபுரத்தில் ஊழிக் காலத்தில் அழியபடவிருந்த வேதங்களை குடத்திலிட்டு காத்த மச்சஅவதாரமான ஸ்ரீ வேத நாராயண சுவாமி கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயில் தேவஸ்தானத்தின் கீழ் நிா்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ சுவாமி கோயிலில் கருட சேவை நடைபெறும் அதே நாளில் கருட சேவையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

அதன்படி, காஞ்சிபுரத்தில் வரும் ஜூன் 2-ஆம் தேதி காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை கருடசேவை நடைபெற உள்ளது.

எனவே இந்தக் கோயிலிலும் வரும் ஜூன் 2-ஆம் தேதி கருட சேவை நடைபெற உள்ளது. இந்த கருட சேவை ‘காஞ்சி கருட சேவை’ என்றழைக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT