திருமலை: 67,923 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 67,923 பக்தா்கள் தரிசித்தனா்.
திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 67,923 பக்தா்கள் தரிசித்தனா். 22,880 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், சனிக்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்)15 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. இதற்கிடையே, வெள்ளிக்கிழமை முழுவதும் 67, 923 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 22, 880 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.03 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.