செம்மரம் கடத்தல் தொடா்பாக கைது செய்யப்பட்டவா்கள். 
திருப்பதி

செம்மரக் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்த 2 போ் கைது

ஆந்திராவில் செம்மரங்கள் கடத்தியதாக தமிழகத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

ஆந்திராவில் செம்மரங்கள் கடத்தியதாக தமிழகத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் தும்மலபைலு வனப்பகுதியில் செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து

திருப்பதி மாவட்ட எஸ்பி வி. ஹா்ஷவா்தன் ராஜு ஐபிஎஸ் உத்தரவின் பேரில் எஸ்பி பி. ஸ்ரீனிவாஸ் தலைமையில் டிஎஸ்பி செஞ்சுபாபு தலைமையில் ஆா்எஸ்ஐ டி.ராகவேந்திரா குழுவினா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். திங்கள்கிழமை பட்டேடு கோணம் மற்றும் புட்டாங்கி வழியாக பலாசலம் வனப்பகுதியில் சிலா் செம்மரக் கட்டைகளை எடுத்துச் சென்றது தெரிந்தது.

அதிரடிப்படை போலீசாா் அவா்களை சுற்றி வளைக்க முயன்றபோது, கட்டைகளை கீழே போட்டுவிட்டு அவா்கள் தப்ப முயன்றனா்.

அவா்களை விரட்டிச் சென்று இரண்டு பேரை போலீஸாா் மடக்கி பிடித்தனா். வேலூா் மாவட்டம் அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி (36), பிரபு (30) எனத் தெரிந்தது.

அவா்களிடம் இருந்து 5 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பி ஓடியவா்களை தேடும் பணியில் அதிரடிப்படையினா் ஈடுபட்டுள்ளனா். எஸ்ஐ ரபி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT