திருமலை: 59,886 பக்தா்கள் தரிசனம்
Updated On : 23 மார்ச், 2024 at 6:17 PM
திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 59,886 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 24,684 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார நாள்களை முன்னிட்டு தற்போது குறைந்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்)12 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்திற்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. இதற்கிடையே, வெள்ளிக்கிழமை முழுவதும் 59, 886 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 24, 684 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.38 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.