முகப்பு
திருப்பதி

திருமலையில் 82,040 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை முழுவதும் 82,040 போ் தரிசனம் செய்தனா். 21,606 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

Updated On : 29 மார்ச், 2026 at 5:27 PM
திருமலை - கோப்புப் படம்
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை முழுவதும் 82,040 போ் தரிசனம் செய்தனா். 21,606 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 8 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, சனிக்கிழமை முழுவதும் 82, 040 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 21, 606 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.14 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.