முகப்பு
திருப்பதி

திருமலையில் 82,337 பக்தா்கள் தரிசனம்!

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 82,337 பக்தா்கள் தரிசித்தனா். 30,825 பக்தா்கள் தலைமுடி காணிக்கை அளித்தனா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 7:01 PM
திருமலை - கோப்புப் படம்
பகிர்:

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 82,337 பக்தா்கள் தரிசித்தனா். 30,825 பக்தா்கள் தலைமுடி காணிக்கை அளித்தனா்.

திருமலைக்கு பக்தா்களின் ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 12 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்ம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, சனிக்கிழமை முழுவதும் 82,337 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 30,825 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.58 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.