திருமலை: 60,928 பக்தா்கள் தரிசனம்
Updated On : 30 மார்ச், 2024 at 9:02 PM
திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 60,928 பக்தா்கள் தரிசனம் செய்தனா். மொத்தம் 23,368 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், சனிக்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்)24 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை முழுவதும் 60,928 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 23, 368 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்த்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.14 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.