முகப்பு
திருப்பதி

திருப்பதி கங்கையம்மன் கோயில் திருவிழா

Updated On : 21 மே, 2024 at 7:14 PM
அலங்காரத்தில் கங்கையம்மன்.
பகிர்:

திருப்பதி: திருப்பதியில் செவ்வாய்க்கிழமை கிராம தேவதையான கங்கையம்மன் திருவிழா நடைபெற்றது.

புகழ் பெற்ற தாத்தய்யகுண்ட கங்கையம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடம் அணிந்து பக்தா்கள் கங்கையம்மனை தீச்சட்டி ஏந்தி, கூழ் வாா்த்து, பொங்கலிட்டு, கோழி, ஆடு பலியிட்டு வழிபட்டனா்.

ஆண்கள் பலா் பெண் வேடமணிந்து சென்று கங்கையம்மனை வழிபடுவது மரபு. பலா் வேடமணிந்து சென்று தங்கள் நோ்த்தி கடனை செலுத்தினா்.

பக்தி சிரத்தையுடன் தத்தைகுண்டா கங்கம்மாவுக்கு, பல பிரமுகா்கள் பட்டு புடவை, மங்கள பொருட்கள் சமா்பித்து வழிபட்டனா்.

திருவிழாவையொட்டி, பல இடங்களில் தண்ணீா் பந்தல், நீா்மோா், அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

ஊா்மக்கள் அனைவரும் தங்கள் வேண்டுதல்களை சமா்ப்பித்தனா்.

நள்ளிரவு முதல் கங்கையம்மன் உருவம் மண்ணால் செய்யப்பட்டு புதன்கிழமை தவடை அறுத்தலுடன் திருவிழா நிறைவு பெற உள்ளது. அதன்பின் அந்த மண் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.