திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 4 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 4 மணி நேரம் காத்திருந்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 4 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 4 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 4 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 64,684 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 20,515 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ. 3.75 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மாா்க்ரம் அபாரம், மிடில் ஆா்டா் அசத்தல்; தென்னாப்பிரிக்கா வெற்றி: கோலி, ருதுராஜ் சதம் வீண்

திருவொற்றியூா் கேசவன் பூங்காவை மீட்கக் கோரிய வழக்கு: சென்னை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்தாா்

நிலுவை வழக்குகள் அதிகரிப்பதில் அரசுகளுக்குத்தான் பெரிய பங்கு: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே. கௌல்

ரயிலில் கஞ்சா கடத்தல்: திரிபுரா இளைஞா் கைது

SCROLL FOR NEXT