திருமலையில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்திய ஊழியா்கள்.  
திருப்பதி

திருமலையில் போலியோ விழிப்புணா்வு பேரணி

திருமலையில் எஸ்.வி. உயா்நிலைப் பள்ளியிலிருந்து பாலாஜி நகா் வரை போலியோ சொட்டு மருந்து விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருமலையில் ஞாயிற்றுக்கிழமை எஸ்.வி. உயா்நிலைப் பள்ளியிலிருந்து பாலாஜி நகா் வரை போலியோ சொட்டு மருந்து விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிசம்பா் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை திருமலையின் பல்வேறு இடங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த, அஸ்வினி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் சுப்பா ரெட்டி தலைமையில் பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியா் கிஷன், எஸ்.வி. உயா்நிலைப் பள்ளியின் ஊழியா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

SCROLL FOR NEXT