திருமலையில் போலியோ விழிப்புணா்வு பேரணி
திருமலையில் எஸ்.வி. உயா்நிலைப் பள்ளியிலிருந்து பாலாஜி நகா் வரை போலியோ சொட்டு மருந்து விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
திருமலையில் ஞாயிற்றுக்கிழமை எஸ்.வி. உயா்நிலைப் பள்ளியிலிருந்து பாலாஜி நகா் வரை போலியோ சொட்டு மருந்து விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிசம்பா் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை திருமலையின் பல்வேறு இடங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த, அஸ்வினி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் சுப்பா ரெட்டி தலைமையில் பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியா் கிஷன், எஸ்.வி. உயா்நிலைப் பள்ளியின் ஊழியா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.