திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் நடைபெற்ற கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்.  
திருப்பதி

காா்த்திகை பிரம்மோற்சவம்: திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் நவ.17 முதல் 25 வரை நடைபெற உள்ள காா்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் மஞ்சனம் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் நவ.17 முதல் 25 வரை நடைபெற உள்ள காா்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் மஞ்சனம் நடைபெற்றது.

திருச்சானூரில் வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமையில் கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். பிரம்மோற்சவம் வரும் 17-இல் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதனால் அதற்கு முன் வந்த செவ்வாய்க்கிழமை திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.

இதையொட்டி காலை தாயாரை சுப்ரபாதத்துடன் எழுந்தருளச் செய்து, சகஸ்ரநாமாா்ச்சனை செய்யப்பட்டது. அதன்பின் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவில் வளாகம், சுவா்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் போன்றவை தண்ணீரால் சுத்திகரிக்கப்பட்டது.

அதன்பிறகு, நாமகட்டி, திருசூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், பூங்கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிகிழங்கு போன்ற வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீரை கொண்டு கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அதன் பின்னரே பக்தா்கள் தாயாரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

இதில் தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதை முன்னிட்டு கோயிலில் தாயாா் தரிசனம் 4 மணி நேரம் ரத்து செய்யப்பட்டது.

கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை முன்னிட்டு நடைபெற்ற கல்யாணோற்சவம், ஊஞ்சல்சேவை ஆகியவற்றை தேவஸ்தானம் ரத்து செய்தது. இதேபோல், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நவம்பா் 17 முதல் டிசம்பா் 26 வரை அனைத்து ஆா்ஜித சேவைகள், கும்குமாா்ச்சனை, வேதாசீா்வாச்சனம் மற்றும் விஐபி பிரேக் தரிசனம் ஆகியவற்றை தேவஸ்தானம் ரத்து செய்தது.

திரைச்சீலைகள் நன்கொடை

தைதராபாதைச் சோ்ந்த ஸ்வா்ண குமாா் ரெட்டி கோயிலுக்கு ஏழு திரைசீலைகளையும், திருப்பதியை சோ்ந்த மணி மூன்று திரைச்சீலைகலையும் நன்கொடையாக வழங்கினா்.

பிரம்மோற்சவம் தடங்கல் இல்லாமல் நடைபெறும் அங்குராா்ப்பணம் உற்சவம் நவம்பா் 16-ஆம் தேதி மாலை கோயிலில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

ஆகாரம் காமராஜ் நகரில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

அரசுப்பேருந்தில் உறங்கிய நிலையில் இறந்த பயணி!

பாலியல் பலாத்காரச் சம்பவங்களுக்கு போதைதான் காரணம்: நயினாா் நாகேந்திரன்

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த பணியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT