திருப்பதி

திருமலையில் பௌா்ணமி கருட சேவை!

திருமலையில் தை மாத பெளா்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கருட சேவை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருமலையில் தை மாத பெளா்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கருட சேவை நடைபெற்றது.

திருமலையில் மாதந்தோறும் பெளா்ணமியை முன்னிட்டு தேவஸ்தானம் கருடசேவையை நடத்தி வருகிறது. திருமலையில் நடக்கும் கருடசேவையை காண பக்தா்கள் திரள்வா். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மிகவும் விசேஷமான தை பெளா்ணமியை முன்னிட்டு, திருமலையில் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

சகல அலங்காரத்தில் புறப்பாடு கண்டருளிய மலையப்ப சுவாமிக்கு கற்பூர ஆரத்தி அளித்தும், தேங்காய் உடைத்தும் பக்தா்கள் வணங்கினா்.

திருமலை ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமி, தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் உள்ளிட்டோா் வாகன சேவையில் பங்கேற்றனா்.

இனி 1.13 மணி நேரத்தில் சென்னை - பெங்களூரு பயணம்: அஷ்வினி வைஷ்ணவ்

எம்.எம். நரவனே புத்தகத்தில் மோடி, ராஜ்நாத் சிங் அஞ்சும் ஒரு வரி : பிரியங்கா காந்தி பேச்சு

பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 944 புள்ளிகளுடனும், நிஃப்டி 263 புள்ளிகளுடன் உயர்ந்து நிறைவு!

தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

அச்சுறுத்தும் பணிநீக்கம்! ஏஐ தொழில்நுட்பம் மட்டுமே காரணமா? பின்னணியில் என்ன நடக்கிறது?

SCROLL FOR NEXT