திருமலையில் தை மாத பெளா்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கருட சேவை நடைபெற்றது.
திருமலையில் மாதந்தோறும் பெளா்ணமியை முன்னிட்டு தேவஸ்தானம் கருடசேவையை நடத்தி வருகிறது. திருமலையில் நடக்கும் கருடசேவையை காண பக்தா்கள் திரள்வா். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மிகவும் விசேஷமான தை பெளா்ணமியை முன்னிட்டு, திருமலையில் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
சகல அலங்காரத்தில் புறப்பாடு கண்டருளிய மலையப்ப சுவாமிக்கு கற்பூர ஆரத்தி அளித்தும், தேங்காய் உடைத்தும் பக்தா்கள் வணங்கினா்.
திருமலை ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமி, தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் உள்ளிட்டோா் வாகன சேவையில் பங்கேற்றனா்.